பணத்துக்காக கல்யாணம்…

செய்திகள்

ponmolie2.gif

எறிகணை தாக்குதல்களினால் மல்லாவி துணுக்காய் பிரதேசத்து மக்கள் பாதுகாப்பு தேடி இடம்பெயர்வு

செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாவி துணுக்காய் பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களினால் இங்கிருந்து பொதுமக்கள் மாங்குளம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 5000 குடும்பங்கள் வரையில் இந்த எறிகணை தாக்குதல்களினால் இடம்பெயர நேரிடலாம் என தெரிவித்துள்ள முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இவர்களையும் ஏற்கனவே மாந்தை கிழக்குப் பிரதேசமாகிய பாண்டியன்குளம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களையும் பராமரித்து, அவர்களுக்கான அவசர நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முடியாத சிக்கலான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள், ஊடகங்கள் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க கவன்ம் செலுத்தியுள்ளது-எவன் பெய்ஜேன்பன்

செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாகவும்,ஊடகங்கள் மீதான தாக்குதல் குறித்தும் அமெரிக்கா ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய உதவி செயலாளர் எவன் பெய்ஜேன்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 30ம் திகதி முதல் ஜூலை 1ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்த எவன் பெய்ஜென்பன் தாந்து இலங்கைக்கான விஜயத்தின் போது பதில் வெளிவிவகார அமைச்சர் ஹீசெய்ன் பையா,அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளிநாட்டு வேலைவய்ப்புஅமைச்சர்,கெஹெலிய ரம்புக்வெல,பாதுகாப்பு செயலளர் கோதபாய ராஜப்க்ஷ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன ஆகியோரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்கா இலங்கையுடன் நீண்டகால உறவினை பேணி வருகிறது இச்சந்திப்பு மூலம் இவ்வுறவுகள் மேலும் பலப்படுத்தப்படுகிறது.அமெரிக்கா இலங்கைக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கும் கிழக்கும் உட்பட்ட அபிவிருத்தி திட்டங்களிற்கும் தொடர்ந்து உதவிகளை வழங்குமென எவன் பெய்ஜேன்பன் தெரிவித்துள்ளார்.

சுயவிருப்பத்தின் பேரில் இலங்கை வந்தேன்: கருணா

செய்திகள்

பிரித்தானியாவில் இருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின் பேரிலும்தான் இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை இன்று வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார். இருந்த போதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். அதேவேளை கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாத்க தெரிவித்த முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பின்னர் கருணாவைச் சந்திப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி

செய்திகள்

உலக உணவுத் திட்டம் ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முதல் தடவையாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளுக்காக ஐ.நா.வின் மனிதாபிமான விமான சேவை விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாமதமின்றி உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஐ.நா. விமானங்களை பயன்படுத்த உலக உணவுத் திட்டம் அனுமதியை கோரியிருந்ததாகவும் அதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்

இந்தியசெய்திகள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டியில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த ரயில் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், அந்த ரயில் பேசின்பிரிட்ஜ் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை 10 மணியளவில் ரயில்வே ஊழியர்கள் பெட்டிகள சுத்தம் செய்ய நுழைந்தபோது 2ம் வகுப்பு ஏ.சி பெட்டியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிய நிலையில், இருக்கையில் பிணமாக உட்கார்ந்த நிலையில் காணப்பட்டார்.அவரது முகம் முழுவதுமாக சட்டையால் மூடப்பட்டிருந்தது.நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், அந்த வாலிபர் ரயிலில் பயணம் செய்த போது தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை.பேசின்பிரிட்ஜ் பணிமனை, அல்லது சென்ட்ரல்-பேசின்பிரிட்ஜ் இடையே ரயில் நின்றிருந்தபோது தான் அவரை யாரோ தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இது குறித்து சென்டிரல் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், இது தற்கொலையாகத் தெரியவில்லை. அவரது கால்கள் இரண்டும் தரையை தொட்ட நிலையில் இருந்தனர். இதனால் தற்கொலை இல்லை. யாரோ கொலை செய்து ரயில் பெட்டிக்குள் தொங்க விட்டுள்ளனர் என்றனர்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால் உடன் நடவடிக்கை ஜனாதிபதி தெரிவிப்பு;

செய்திகள்

m.gifஊடகவியலாளர் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் குறித்து ஆதாரங்கள், சாட்சியங்களை சமர்ப்பித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் இணைப்பாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர் மகேந்திர ரட்ணவீர ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த ஆதாரங்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும். என்னை இலக்கு வைத்து ஹெலி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வரவேற்கிறேன். இத்தகைய தாக்குதல்களை சந்திக்க நான் தயாராகவேயுள்ளேன் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். பிரதி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினருமான பைசல் முஸ்தபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பாரதி தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.

தண்டவாளத்தில் முத்தம்-காதலி பலி, காதலன் கால் ‘கட்’!

உலகசெய்திகள்

118.gifரயில் வருவதை கூட கவனிக்காமல், தண்டவாளத்தில் முத்தமிட்டபடி நடந்த காதல் ஜோடி மீது ரயில் மோதியது. இதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் கால் துண்டிக்கப்பட்டது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் ஒரு இளம் ஜோடி ரொமான்டிக் மூடில் போய்க் கொண்டிருந்தது. அப்போது காதலனும், காதலியும் அழுத்தமாக முத்தமிட்டிபடி நடந்துள்ளனர்.அந்த சமயத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதை காதல் ஜோடி கவனிக்கவில்லை. அந்த மன நிலையிலும் அவர்கள் இல்லை.காதல் ஜோடி தன்னிலை மறந்து நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் பலமாக ஹாரன் அடித்து எச்சரித்துப் பார்த்தார். ஆனால் காதல் ஜோடியின் காதில் அது விழவில்லை. காரணம் பக்கத்து டிராக்கில் போய்க் கொண்டிருந்த சரக்கு ரயிலின் சப்தத்தில் ரயிலின் ஹாரன் அவர்களுக்கு கேட்கவில்லை.

மின்சாரம் தாக்கி 2 பெண்கள், தொழிலாளி பலி

இந்தியசெய்திகள்

flash.gifகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள கீழகரம்பட்டி கிராமத்தில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று காலை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வீரமணி (32) என்ற பெண் தொழிலாளர் மின்சார வயரைத் தொட்டு விட்டார். இதையடுத்து அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் துடிதுடித்தார்.இதைப் பார்த்த அவரது கணவர் மணி (43) வீரமணியைக் காப்பாற்ற ஓடி வந்து அவரைப் பிடித்தார்.அப்போது அவரது உடலுக்கும் மின்சாரம் பரவியது.இதைப் பார்த்த முத்துலட்சுமி (35) என்ற பெண் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.3 பேருமே தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்களை மீட்ட போலீஸார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

50 ரூபாய் தர மறுத்த சிறுவனை ரயிலிலிருந்து தள்ளிய டிடிஆர்

இந்தியசெய்திகள்

ரயில் பெட்டியில் கிடந்த 50 ரூபாய் தாள் யாருக்கு சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில், 13 வயதுசிறுவனை, ஓடும் ரயிலிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினார் கொடுமைக்கார டிக்கெட் பரிசோதகர். இதில் அந்த சிறுவனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு விட்டது.கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. ரூர்கேலா வந்த அந்த ரயிலில் சங்கர் சிங் என்கிற 13 வயது சிறுவன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். அப்போது ரயில் பெட்டியில் 50 ரூபாய் தாள் கிடப்பதைப் பார்த்தான்.அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பணத்தை தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதைத் தர மறுத்துள்ளான் சங்கர்சிங். இதனால் கோபமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஈவு இரக்கமே இல்லாமல், ஓடும் ரயிலிலிருந்து சிறுவனைப் பிடித்து தள்ளி விட்டார்.இதில் சிறுவன் படுகாயமடைந்தான். உடனடியாக ரூர்கேலாவில் உள்ள மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றனர். அங்கு அவனது ஒரு காலை வெட்டி எடுத்துள்ளனர் டாக்டர்கள். தொடர்ந்து அவன் சிகிச்சைபெற்று வருகிறான்.

பாக்.போராளிகள் வசமிருந்த பிரபல அரசியல்வாதி பெரன்கோட் உட்பட 15 பேரை கொலம்பியா மீட்டது

செய்திகள்

மிகச் சிறந்த நடவடிக்கையென உலக நாடுகள் புகழாரம்
கொலம்பிய இராணுவத்தின் நடவடிக்கையால் போராளிகளால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ்கொலம்பிய அரசியல்வாதி இங்றிட் பெரன்கோட்டும் ஏனைய 14 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாக்.போராளிக் குழுவில் ஆறு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரன்கோட் போராளிகள் வசமிருந்த உயர் அந்தஸ்துடைய பணயக் கைதிகளில் ஒருவராவார். இந் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட இராணுவத்தினருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் போராளிகள் வசமிருக்கும் ஏனைய பணயக் கைதிகளையும் பார்க் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொலம்பிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சுமார் 40 வருடங்களாக பார்க் போராளிகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாறம்பைக்குளத்தில் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

செய்திகள்

arme_a_feu15.gifவவுனியா மாறம்பைக்குளத்தில் இளைஞன் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.யோகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இறந்தவரின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கும் மரண விசாரணைகளுக்குமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விடத்தல் தீவில் எறிகணைத் தாக்குதல்

செய்திகள்

மன்னாரில் உள்ள படையினரின் ஆட்லரி தளங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான விடத்தல் தீவு பகுதியினை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை முதல் தொடர்ச்சியான தாக்குதலினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர் . இதனால் மன்னார் நகரப்பகுதியில் பாரிய செல் சத்தங்கள்கேட்ட வன்னமே உள்ளது. இதனால் மன்னார் பகுதியில் மக்களுக்கிடையில் அச்சநிலை உருவாகியுள்ளது. இதே வேலை இன்று வியாழக்கிழமை மாலை 3.20 மணியளவில் இலங்கை விமானப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியினுள் கிபீர்த்தாக்குதலினையும் மேற் கொண்டுள்ளனர். ஆனால் சேதவிபரங்களை அறிந்து கொள்ள முடிய வில்லை .

குடாநாட்டில் தொடர்ச்சியான மின்சாரம் வழங்குமுகமாக ஜெனரேட்டர் அனுப்பிவைப்பு

செய்திகள்

யாழ். குடாநாட்டில் 24 மணி நேரமும் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் நோக்கில் 36 மெகா வொட்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஜெனரேட்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் மின்சக்கதி எரி சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை பாராளுமன்றத்தின் முதலாம் குழு அறையில் நடைபெற்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க முன்னர் இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஜெனரேட்டரைப் பொருத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களுக்குள் ஆரம்பிக்கப்படும். அதன்மூலம் யாழ் குடா முழுவதற்கும் 24 மணி நேர மின்சாரம் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும். இதனால் அப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

செய்திகள்

திருகோணமலை உப்புவெளியில் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொதுமக்களால் உப்புவேளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே இவரது சடலம் மீட்கப்பட்து. உப்புவேளியைச் சேர்ந்த செல்வநாயகம் என்பரே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் உப்புவேளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் புலிகள் இயக்க குழு மோதலில் தலைவர் வெட்டிக்கொலை

செய்திகள்

39.gifலண்டன் முதலாக ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பிரதான நகரப் பிரதேசங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கக் குழுக்களிடையே அண்மைக் காலமாக மோதல் நிலை உருவாகி வருவதை லண்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரபாகரன் பிறந்த ஊராகிய வல்வெட்டித்துறையையும் அண்டிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த புலிகள் இயக்கத்தினரைக் கொண்ட இரண்டு குழுக்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் முடிவில் குறித்த புலிகள் இயக்கக் குழு ஒன்றின் தலைவரைப் படுகொலை செய்வதில் முடிந்துள்ளது. இதுபற்றி லண்டன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புலிகள் இயக்கத்தின் இரண்டு குழுவினரிடையே கடந்த காலங்களில் இருந்து வந்த தகராறு தீவிரமடைந்த நிலையில் அண்மையில் இரண்டு குழுவினரும் பகிரங்கமாக மோதிக்கொண்டார்கள் எனவும் இதன் பின்னர் குறித்த ஒரு குழுவைச் சேர்ந்த நான்கு புலிகள் இயக்கத்தினர் மற்றக்குழுவின் தலைவரை வெட்டிக் கொன்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதியில் படையினர் வீடுவீடாக தேடுதல்

செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதி செவ்வாய்க்கிழமை காலை சுமார் மூன்று மணிநேரம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல்கள் நடத்தப்பட்டது. ஆரையம்பதி பரமநாதர் கோயில் பகுதியிலேயே இந்தச் சுற்றிவளைப்பும் தேடுதலும் காலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெற்றது. இதன்போது படையினரும் பொலிஸாரும் வீடு வீடாகச் சென்று தேடுதல்களை நடத்தியுள்ளனர். இப்பகுதியில் வீடு வீடாகச் சென்ற படையினர் வீட்டில் உள்ள பொருட்களை கடுமையாக சோதனை செய்ததுடன் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் சேகரித்துள்ளனர். சுற்றிவளைப்பு தேடுதலில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை ஆரையம்பதி செல்வாநகரின் கிழக்கு பகுதி விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் வீதியால் சென்ற பெண்களையும் கடுமையான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதேவேளை செல்வாநகரின் மத்திய பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பில் இராணுவம் தங்கியுள்ளதால் அந்த வீட்டுக்காரர்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்தில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களும் அச்சமடைந்துள்ளனர். அண்மைய நாட்களாக ஆரையம்பதி பகுதி விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுவதால் இப்பகுதியில் ஏதோ அசம்பாவிதம் ஏற்படப் போகின்றதோ என்ற அச்ச உணர்வில் அப்பகுதி மக்கள் உள்ளனர். படையினரின் இவ்வாறான சுற்றிவளைப்புத் தேடுதலினால், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லுதல், அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்லுதல், மற்றும் ஏனைய வேலைக்கு செல்பவர்களின் நாளாந்த நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கருணா அம்மான் நாடு திரும்பினார்

செய்திகள்

karuna_karu.gifஇலங்கையிலிருந்து வேரொவரின் பெயரிலான கடவுச்சீட்டை பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்குள் வருகைதந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கருணா அவர்கள் அந்த தண்டனை முடிந்த நிலையில் இலங்கைக்கு திரும்ப அனுப்பபட்டிருப்பதாக கொழும்பிலுள்ள பிரிதானியா தூதரகத்தின் சார்பிலான பேச்சாளர் டொமினிக் வில்சன் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் நாடு திரும்பியது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஊடக பேச்சாளர் அசாத் மெளலானா தெரிவிக்கையில் ;-இன்று இலங்கைக்கு மீண்டும் திரும்பி எங்களுடன் மாலை 4 மணியளவில் தொலைப்பேசி தொடர்பை ஏற்படுத்தி தான் இலங்கைக்கு வந்துள்ள செய்தியை எங்களுக்கு அறிவித்திருந்தார். இப்பொழுது அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் அவர் எதற்காக திரும்பிவந்திருக்கின்றார். தொலைப்பேசியில் என்ன? பேசினார். அவர் மட்டும் வந்திருக்கின்றாரா? அல்லது மனைவி மற்றும் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றாரா? அவர் வருகைக்கு முன்னர் உங்களிடமோ அல்லது அரசாங்கத்திடம் ஏதாவது ஆலோசனைகள் நடத்தப்பட்டதா? என்று அவரிடம் கேட்கப்பட்டகேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

செய்திகள்

Anandasangari.jpgவீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவருமான திரு.வி.ஆனந்தசங்கரி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

சார்க் உச்சிமாநாட்டின் போது இலங்கையில் கடல், வான் பிராந்திய கட்டுப்பாடு இந்தியாவிடம்

செய்திகள்

அண்மையில் இந்தியாவிலிருந்து இந்திய பாதுகாப்புச் செயலர் ஸ்ரீ. விஜயசிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகிய மூன்று முக்கிய உயர் மட்டப் பதவியிலுள்ளவர்கள் கொண்ட தூதுக்குழு கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ ஆகிய நிறைவேற்று உயர் மட்டத் தலைவர்களுடன்நடத்திய பேச்சுவார்த்தையில் இந்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இனமோதல் சம்பந்தப்பட்ட இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு உயர்மட்டத்தலைவர்களும் சந்தித்துப் பேசி எடுத்துள்ள தீர்மானங்கள் பற்றி ஸ்ரீலங்கா அரச தரப்பிலிருந்தோ அல்லது இந்தியத்தரப்பிலிருந்தோ, உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அங்கு எடுக்கப்பட்ட அதிமுக்கிய தீர்மானங்கள் பற்றிப் பல்வேறு ஊடகத்தரப்புகளிலிருந்தும் பலவாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.